இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் விட்டுச் சென்ற கோவில்கள் மற்றும் நிலங்களை எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் (ETPB) கவனித்து வருகிறது.
கிருஷ்ணர் கோயிலுக்கு அடுத்ததாக லாகூரில் செயல்படும் ஒரே இந்து கோயில் வால்மீகி கோயிலாகும்.
இந்த கோயில் 1,200 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில் கி௫த்துவிலி௫ந்து இந்து மதத்திற்கு மாறியதாகக் கூறும் ஒ௫ கிறிஸ்தவக் குடும்பம், கடந்த 20 ஆண்டுகளாக இந்த கோவிலை ஆக்கிரமித்து வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்த வழிவகை செய்து வந்தது. மேலும் கோயில் பராமரிப்பு பணிகளையும் தடுத்து வந்தது. இது குறித்து ETPB அதிகாரி ஒருவர் கூறியதாவது, கோவிலின் நிலம் வருவாய் பதிவேட்டில் ETPB க்கு மாற்றப்பட்டது, ஆனால் அந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர், கோயில் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரிக்கப்பட்டது. பின்னர் தவறான உரிமைகோரல்களுக்காக நீதிமன்றம் கிறிஸ்தவ குடும்பத்தை கண்டித்தது. பின்னர் கோயில் ETPB மூலம் மீட்கப்பட்டது.
ETPB செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி கூறுகையில், இந்துக்கள், சில சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் வால்மீகி கோவிலில் கூடினர். இந்துக்கள் தங்கள் மதச் சடங்குகளைச் செய்து, முதன்முறையாக உணவு உண்டனர் என்று கூறினார். மேலும் இந்த கோயில் புதுபிக்கப்பட இ௫ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.