பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானில் ராணுவக் காவல் நிலையங்களை அமைக்க சீனா திட்டம்

August 17, 2022

சீனா அதன் லட்சியமான பெல்ட் அண்ட் ரோடு முயற்சியின் ஒரு பகுதியாக, சர்சைக்குரிய நாடுகளான பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானில் ராணுவக் காவல் நிலையங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது. அதாவது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா ஆர்வமாக உள்ளது. சில மதிப்பீடுகளின்படி, பாகிஸ்தானில் சீனாவின் முதலீடுகள் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளன. ஏனெனில் அந்நாடுகள் நிதி மற்றும் இராணுவ ஆதரவிற்காக சீனாவை சார்ந்துள்ளது. ஆகவே சமநிலையின்மையைக் கருத்தில் கொண்டு, சீனாவானது தனது ஆயுதப் பணியாளர்களை […]

சீனா அதன் லட்சியமான பெல்ட் அண்ட் ரோடு முயற்சியின் ஒரு பகுதியாக, சர்சைக்குரிய நாடுகளான பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானில் ராணுவக் காவல் நிலையங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது.

அதாவது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வழியாக மத்திய ஆசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா ஆர்வமாக உள்ளது. சில மதிப்பீடுகளின்படி, பாகிஸ்தானில் சீனாவின் முதலீடுகள் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளன. ஏனெனில் அந்நாடுகள் நிதி மற்றும் இராணுவ ஆதரவிற்காக சீனாவை சார்ந்துள்ளது. ஆகவே சமநிலையின்மையைக் கருத்தில் கொண்டு, சீனாவானது தனது ஆயுதப் பணியாளர்களை நிலைநிறுத்தும் நோக்கில் ராணுவக்காவல் நிலையங்களைக் கட்ட அனுமதிக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ மற்றும் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா ஆகியோரை சீனத் தூதர் நோங் ரோங் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா ஏற்கனவே குவாடரில் பாதுகாப்பு காவல் நிலையங்களை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் குவாடர் சர்வதேச விமான நிலையத்தை தனது போர் விமானங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வதால் இன்னும் பல விஷயங்களில் சீனா மற்றும் பாகிஸ்தானின் எதிர்பார்ப்புகளை அது பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu