பாகிஸ்தான் மருத்துவர் முஹம்மது மசூத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்
பாகிஸ்தானிய மருத்துவரும் முன்னாள் மாயோ கிளினிக் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முஹம்மது மசூத் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது மசூத் வேலை விசாவில் அமெரிக்காவில் இருந்தபோது அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்த விரும்பிய இஸ்லாமிய அரசு குழுவிற்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு தகவல்களை அளித்ததற்காக கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரணையில் அக்குழு ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராகப் போராட சிரியாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் மசூத் தெரிவித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும் மசூத் மினசோட்டாவில் உள்ள ரோசெஸ்டரில் உள்ள மருத்துவ மையத்தில் பணிபுரிந்தவர். ஆனால் அவர் கைது செய்யப்படும் போது மருத்துவமனையில் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.