பொம்மை உற்பத்தித்துறையில் இந்தியா மாபெரும் வளர்ச்சி

August 1, 2022

இந்திய பொம்மை உற்பத்தி துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. கொரோனா காலத்தில் சுமார் 2600 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டுமக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் பொம்மை ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளது. பொம்மை உற்பத்தித்துறை மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறினார். முன்பு பொம்மைகள் ஏற்றுமதி 300, 400 கோடி […]

இந்திய பொம்மை உற்பத்தி துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. கொரோனா காலத்தில் சுமார் 2600 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரதமர் மோடி வானொலி மூலம் நாட்டுமக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் பொம்மை ஏற்றுமதி அதிகரித்து இறக்குமதி குறைந்துள்ளது. பொம்மை உற்பத்தித்துறை மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறினார்.

முன்பு பொம்மைகள் ஏற்றுமதி 300, 400 கோடி ரூபாய் என்ற அளவே இருந்தது. ஆனால் ,கொரோனா காலத்தில் 2600 கோடி மதிப்பிலான பொம்மைகளை வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்தார். இந்திய பொம்மைகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், இயற்கை சார்ந்தும் இருப்பதாக கூறினார். இளைஞர்கள், புதிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரே இந்தியாவின் இந்த சாதனைக்கு காரணம் என்று தெரிவித்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்திய பொம்மைகளை மட்டுமே வாங்கித்தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu