பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

August 24, 2022

பொறியியல் பொது பிரிவுக்கான கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெற இருந்தது. ஆனால் அதனை நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பின் நடைபெறும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 443 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வுக்கு 1.58 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு […]

பொறியியல் பொது பிரிவுக்கான கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெற இருந்தது. ஆனால் அதனை நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பின் நடைபெறும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள 443 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வுக்கு 1.58 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கியது.

முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu