போலி ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் குறைந்தது' :மத்திய அரசு

August 2, 2022

போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து லோக்சபாவில் பா.ஜ.க எம்.பி., ஆர்.டி பட் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசுகையில், 2021-22ம் நிதியாண்டில், வங்கிகளில் உள்ள ஒட்டுமொத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 13,604 நோட்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, 2018ம் ஆண்டு, 54,776 போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ல் 90,556 நோட்டுகள் […]

போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து லோக்சபாவில் பா.ஜ.க எம்.பி., ஆர்.டி பட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசுகையில், 2021-22ம் நிதியாண்டில், வங்கிகளில் உள்ள ஒட்டுமொத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 13,604 நோட்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, 2018ம் ஆண்டு, 54,776 போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2019ல் 90,556 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ச்சியான நடவடிக்கையால் 2,44,834 போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
90% க்கும் அதிகமான போலி நோட்டுகள் தரம் குறைந்தவை என்றும் அவை இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள அனைத்து முக்கிய பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ போலி ரூபாய் நோட்டுகளை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவது மற்றும் நிதி திரட்டுவதை விசாரிக்க டி.எப்.எப்.சி என்ற தனிப்பிரிவை உருவாக்கி உள்ளது. வங்கதேசத்தில் இருந்து போலி நோட்டுகளை கடத்தி இந்தியாவில் புழக்கத்தில் விடுவதை தடுக்கவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu