மத்திய அரசை கண்டித்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

February 18, 2025

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க மறுப்பதை கண்டித்து, சென்னையில் பிப்ரவரி 18 ஆம் தேதி (செவ்வாய்) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை மாநிலத்திற்கு நிதி வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் மிரட்டுவதாகவும், மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தித் திணிப்பு செய்யப்படுவதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி போன்ற அனைத்து அம்சங்களிலும் முன்னேறியதால், அரசியல் ரீதியாக […]

மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க மறுப்பதை கண்டித்து, சென்னையில் பிப்ரவரி 18 ஆம் தேதி (செவ்வாய்) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை மாநிலத்திற்கு நிதி வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் மிரட்டுவதாகவும், மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தித் திணிப்பு செய்யப்படுவதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி போன்ற அனைத்து அம்சங்களிலும் முன்னேறியதால், அரசியல் ரீதியாக பாஜகவுக்கு ஆதரவில்லாத தமிழக மக்களை மத்திய அரசு குறிவைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அணுகுமுறையை எதிர்த்து, சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இந்த அறிவிப்பில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu