மியாமி ஓபன் டென்னிஸில் ஸ்வரேவ் மற்றும் ஜோகோவிச் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனுடன் மோதினான். இதில், ஸ்வரேவ் 7-5, 6-4 என எளிதாக வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.