சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் நேரத்தை குறைக்க புதிய நடைமுறையை இன்று முதல் அமல்படுத்தி உள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வரும் பயணிகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும், நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் இரண்டு வழித்தடங்களில் ஒன்பது நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் ஏழு நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கின்றது. இந்த ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.