மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,058 கனஅடியில் இருந்து 13,839 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் கனமழை பெய்து வந்ததால் காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இன்றைய நிலையில் மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,058 கன அடியில் இருந்து 13,839 கன அடியாக குறைந்துள்ளது.