வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் போர்ச்சுகல் குடியேற்ற விதிகள் மாற்றம்

August 12, 2022

போர்ச்சுகல் நாட்டில், வெளிநாட்டினர் வந்து பணி செய்ய ஏதுவாக, அந்நாட்டின் குடியேற்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அந்நாட்டின் அதிபர் மார்க்கலோ ரிபெல்லோ டிசோசா ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலமாக, பல வெளிநாட்டினர் போர்த்துகீசிய நாடுகளுக்கு வந்து பணி செய்யும் சூழல் உருவாகும் என்றும், அதன் வழியே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டின் குடியேற்ற விதிகளில் உள்ள மாற்றம் குறித்த மசோதா, நாடாளுமன்றத்தில் ஜூலை 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு […]

போர்ச்சுகல் நாட்டில், வெளிநாட்டினர் வந்து பணி செய்ய ஏதுவாக, அந்நாட்டின் குடியேற்ற விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அந்நாட்டின் அதிபர் மார்க்கலோ ரிபெல்லோ டிசோசா ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலமாக, பல வெளிநாட்டினர் போர்த்துகீசிய நாடுகளுக்கு வந்து பணி செய்யும் சூழல் உருவாகும் என்றும், அதன் வழியே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது.

போர்ச்சுகல் நாட்டின் குடியேற்ற விதிகளில் உள்ள மாற்றம் குறித்த மசோதா, நாடாளுமன்றத்தில் ஜூலை 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சமூகக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்தது. எனவே, அந்த மாற்றங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் இவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற விதிகளில் முக்கியமான மாற்றமாக இருப்பது: "வேலை வாய்ப்புத் தேடி போர்ச்சுகல் நாட்டுக்கு வரும் வெளிநாட்டினருக்கு 120 நாட்கள் வரையிலான தற்காலிக விசா வழங்கப்படும்" என்பதாகும். மேலும், இந்த விசாவினை, கூடுதலாக 60 நாட்கள் வரை நீட்டிக்க முடியும் என்றும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, வீட்டிலிருந்தே பணி செய்யும் முறையில் வேலை செய்வோருக்கும் இந்த குடியேற்ற சட்ட திருத்தம் துணை புரியும் என்று கருதப்படுகிறது. அத்துடன், போர்ச்சுகல் நாட்டின் தற்போதைய முக்கியத் தேவையாக இருக்கும் பணியாளர் பற்றாக்குறை இதன் மூலம் தீர்க்கப்படும். அந்நாட்டில், கட்டுமானம், சுற்றுலா, மருத்துவம் போன்ற முக்கியத் துறைகள், பணியாளர் பற்றாக்குறையால் சிறப்பாகச் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, கொரோனா காரணமாக மிகவும் மோசம் அடைந்த 3வது சுற்றுலாத்துறையாக போர்ச்சுகல் சுற்றுலாத்துறை திகழ்கிறது என்று சர்வதேச நிதி ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், தற்போதைய பொருளாதார நிலையைச் சீர் செய்ய, குறைந்தது 50,000 பணியாளர்களாவது தேவைப்படுவர் என்றும் அந்த அறிக்கை கூறியிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த குடியேற்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்பெயின் நாட்டிலும், போக்குவரத்து, கட்டுமானம், சுற்றுலா போன்ற பல துறைகளில் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறையைத் தீர்க்கும் நடவடிக்கையாக, குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu