சட்டவிரோத வர்த்தகத்தால் அரசுக்கு ₹ 58,521 கோடி வரி இழப்பு - இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு

September 23, 2022

2019-20 ஆம் ஆண்டில் எஃப்எம்சிஜி, மொபைல் போன், புகையிலை பொருட்கள், மது உள்ளிட்ட 5 முக்கிய தொழில்களில் சட்டவிரோத வர்த்தகம் காரணமாக ₹ 58,521 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு 'சட்டவிரோத சந்தைகள்: நமது தேசிய நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 'இந்த ஐந்து முக்கிய தொழில்களில் சட்டவிரோதமான பொருட்களால் அரசாங்கத்திற்கு மதிப்பிடப்பட்ட வரி இழப்பு ₹ 58,521 கோடி […]

2019-20 ஆம் ஆண்டில் எஃப்எம்சிஜி, மொபைல் போன், புகையிலை பொருட்கள், மது உள்ளிட்ட 5 முக்கிய தொழில்களில் சட்டவிரோத வர்த்தகம் காரணமாக ₹ 58,521 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இந்த கூட்டமைப்பு 'சட்டவிரோத சந்தைகள்: நமது தேசிய நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 'இந்த ஐந்து முக்கிய தொழில்களில் சட்டவிரோதமான பொருட்களால் அரசாங்கத்திற்கு மதிப்பிடப்பட்ட வரி இழப்பு ₹ 58,521 கோடி ஆகும்' என்று கூறுகிறது.

2019-20 ஆம் ஆண்டில் இந்தத் தொழில்களில் சட்டவிரோத சந்தைகளின் அளவு ₹ 2.60 லட்சம் கோடியாக இருக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. ஐந்து முக்கிய தொழில்களில் உள்ள பொருட்களின் மொத்த சட்டவிரோத மதிப்பில் 75 சதவீதத்தை வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (F M C G) சார்ந்த தொழில்துறை கொண்டுள்ளது.

இரண்டு அதிக ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் வரி விதிக்கப்பட்ட தொழில்கள், புகையிலை பொருட்கள் மற்றும் மது பானங்கள் ஆகும். இவற்றால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மொத்த வரி இழப்பு கிட்டத்தட்ட 49 சதவீதம் ஆகும்.

எஃப்எம்சிஜி பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் துறையில் சட்டவிரோத வர்த்தகம் காரணமாக அதிகபட்ச வேலைவாய்ப்பு இழப்புகள் (7.94 லட்சம்), புகையிலை தொழில் (3.7 லட்சம்), எஃப்எம்சிஜி வீட்டு மற்றும் தனிப்பட்ட பொருட்கள் தொழில் (2.989 லட்சம்), மதுபானங்கள் தொழில் (97,000) மற்றும் மொபைல் போன் தொழில் (35,000) ஆகும்.

இந்த ஐந்து துறைகளின் சட்டவிரோத வர்த்தகம் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு ₹ 17,074 கோடி (FMCG பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்), ₹ 15,262 கோடி (மதுபானங்கள்), ₹ 13,331 கோடி (புகையிலை பொருட்கள்), ₹ 9,995 கோடி (FMCG வீட்டு மற்றும் தனிப்பட்ட பொருட்கள்) ), மற்றும் ₹ 2,859 கோடி (மொபைல் போன்கள்) ஆகும்.

மொத்த சட்டவிரோத சந்தை அளவு ₹ 2.60 லட்சம் கோடியில், FMCG தொழில் (வீட்டு மற்றும் தனிப்பட்ட பொருட்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்) ₹ 1.97 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. இதைத் தொடர்ந்து மதுபானங்கள் ₹ 23,466 கோடி, புகையிலை பொருட்கள் (ரூ. 22,930 கோடி) மற்றும் மொபைல் போன்கள் (ரூ. 15,884 கோடி) என உள்ளது .

இந்தியாவில் சட்டவிரோத சந்தைகளின் அச்சுறுத்தலைக் எதிகொள்ள முறையான பொருட்களின் தேவை மற்றும் விநியோக இடைவெளியை நிவர்த்தி செய்வது, உள்நாட்டு உற்பத்தித் துறையை வலுப்படுத்துவது, நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பது போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu