தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்காக 1.30 லட்சம் விண்ணப்பங்கள்

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி 8 ஆம் வகுப்பு முதல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வகையில் மாநிலம் முழுவதும் 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 85 […]

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி 8 ஆம் வகுப்பு முதல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவ்வகையில் மாநிலம் முழுவதும் 7,283 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் இலவச இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இந்த திட்டத்தில் 4.6 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். தற்போது வரும் கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் 1.30 லட்சம் பெற்றோர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அதை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விவரம் 29ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu