நாளை நடைபெறும் நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 7-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 3-ந்தேதி முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான மையங்களை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.