சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்

January 6, 2023

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஒரு பயணியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி […]

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஒரு பயணியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.37, 56,000 மதிப்புள்ள 770 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பயணிகளை சோதனை செய்ததில் 2 பேரின் முதுகில் தங்க பசைகளை டேப் போட்டு ஒட்டி நூதன முறையில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரிடம் இருந்து ரூ.1,10, 84,000 மதிப்புள்ள 2 கிலோ 272 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu