பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கநௌரி எல்லை பகுதியில் நடைபெற்று வந்த போராட்டத்தில், சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார். போராட்டத்தின் போது உயிரிழந்த அவருக்கு பஞ்சாப் மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது..
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பஞ்சாப் எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்ததால், அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.