இஸ்ரோ விஞ்ஞானிகள் 8 பேருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

ஓய்வு பெற இருந்த 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டித்து இருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனராக உள்ள விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடகாவில் உள்ள யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று […]

ஓய்வு பெற இருந்த 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டித்து இருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இயக்குனராக உள்ள விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடகாவில் உள்ள யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று பெங்களூரில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டஸ்ட்ரியல் சிஸ்டம் யூனிட் என்ற மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி பத்மகுமார், தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் இஸ்ரோவின் ஏடிஆர்ஐஎன் என்ற ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானியாக உள்ள ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது பணிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu