அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த 10 பேர் எம்எல்ஏவாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதில் 60 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பின்னர் 28ஆம் தேதி மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் பாஜக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து போட்டியிட யாருமில்லை. இதனால் 10 பேரும் ஒருமனதாக எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.