தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி திருப்பூரில் ரூ.26 கோடியிலும், ஓசூரில் ரூ.30 கோடியிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது.
அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி, வடலூர், கூடலூர் ஆகிய 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.115 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.