கர்நாடகாவில் ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் கோவில்களில் வருமானத்தில் 10 சதவிகிதத்தை அரசு வசூலிக்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபையில் கர்நாடகா இந்து சமய நிறுவனங்கள் மற்றும்
அறக்கட்டளை மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் கோவில்களின் வருமானத்தில் பத்து சதவீதம் அரசு வசூலிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸின் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.