புதிதாக தேர்வு செய்யப்படும் குரூப் ஏ ரயில்வே அதிகாரிகளுக்கு 10 ஆண்டு களப்பணி கட்டாயம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், குரூப் ‘ஏ’ ரயில்வே அதிகாரிகள் போதுமான களப்பணி பெறுவதை உறுதி செய்வதற்காக, அவர்களின் பணியின் ஆரம்ப 10 ஆண்டுகளுக்கு தலைமை அலுவலகம் தவிர மற்ற இடங்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் அங்கு களப்பணியை ஆற்ற வேண்டும். இந்த பணியிட மாற்றம் ரயில்வேக்கு அதிக பலன் தரக்கூடியது. இது இளம் அதிகாரிகளை அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களுக்கு தயார்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.