குரோம்பேட்டையில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

April 18, 2023

குரோம்பேட்டையில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தும் வகையில் 400 படுக்கைகளுடன் 2.27 லட்சம் சதுரடியில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.100 கோடியில் கட்டிடம் கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார். இப்பணிகள் முடிந்ததும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இயங்கும். புதிய மருத்துவமனை கட்டிடங்கள் […]

குரோம்பேட்டையில் ரூ.100 கோடியில் தலைமை மருத்துவமனை அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தும் வகையில் 400 படுக்கைகளுடன் 2.27 லட்சம் சதுரடியில், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.100 கோடியில் கட்டிடம் கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார். இப்பணிகள் முடிந்ததும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இயங்கும். புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன.

ஏற்கெனவே உள்ள பழைய மருத்துவமனையில், தற்போது கூடுதல் வசதிக்காக ரூ.6.89 கோடி நிதியில் தாய்சேய் நல கட்டிடம், ரூ.1.25 கோடியில் ஆய்வக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர பல்லாவரத்தில் 10 மருத்துவ கட்டிடங்கள் ரூ.11.12 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu