நியூசிலாந்து கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதியில் கடல் சார் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறு புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில், 3 வார காலத்துக்கு சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுடைய கடல் பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல ஆழ்கடல் உயிரின வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஆழ்கடலில் 2 மில்லியனுக்கும் அதிகமான உயிரின வகைகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதில் வெறும் 10% அளவுக்கு மட்டுமே இதுவரை அறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆய்வுகள் தொடரும் பட்சத்தில், பல்வேறு புதிய உயிரின வகைகள் கண்டறியப்படும் என கூறப்படுகிறது.