சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர்,மாமல்லபுரம் மற்றும் மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் வண்டலூர் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் இந்த வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் கூட்டம் நிரம்பி வழிவதால், பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர்,மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த பேருந்துகள் ஜூன் மாதம் வரை இயக்கப்பட உள்ளது