திருவாரூர், சேலம், கரூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூரிய சக்தி மூலம் 1000 மெ.வா. மின் உற்பத்தி திட்டம் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது.
சூரிய சக்தி மின் உற்பத்திக்காக தமிழ்நாடு மின்சார வாரியம், சொந்தமாக 3263 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது. சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு தற்போது 4வது இடத்தில் உள்ளது. ஜனவரியில் 1,000 மெ. வா. மின்உற்பத்தி தொடங்கப்பட்டால் சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
மேலும், வீடுகளில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, பலரும் குறைந்த திறனில் மேற்கூரை மின் நிலையங்களை அதிகளவில் அமைத்து வருகின்றன.