கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சுமார் 1004 கைதிகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே சுமார் 1004 குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து சிறையில் இருந்து விடுவித்துள்ளார். இதனை சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார். இன்று விடுவிக்கப்பட்ட 1004 பேர்களில் நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறை சென்ற இலங்கையர்களும் அடங்குவர் என்று தெரிவித்தார். முன்பாக போதை பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் 15,000 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.