தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார்.
அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதே போல், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
மேலும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் மாதம் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை 8.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வினாத்தாள் முறையில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.