தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 28-ந் தேதி தொடக்கம்

March 26, 2025

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 28-ந் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு நாளை நிறைவடைகிறது. அதன்பிறகு, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் 9,13,036 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதனால், 12,480 பள்ளிகளை சேர்ந்த 4,46,411 மாணவரும், 4,40,465 மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகளும் இதில் பங்கேற்கின்றனர். இதற்கான 4113 தேர்வு மையங்களில் 48,426 பேர் […]

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 28-ந் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு நாளை நிறைவடைகிறது. அதன்பிறகு, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் 9,13,036 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதனால், 12,480 பள்ளிகளை சேர்ந்த 4,46,411 மாணவரும், 4,40,465 மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகளும் இதில் பங்கேற்கின்றனர்.

இதற்கான 4113 தேர்வு மையங்களில் 48,426 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். தேர்வுகளில் ஒழுங்கு மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்வு துறை எச்சரித்துள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த 25,57,354 மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வை எழுத உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu