தெற்கு சூடான் - பீரங்கி குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலி

March 18, 2023

தெற்கு சூடானில், வியாழன் அன்று பீரங்கி குண்டு வெடித்து குழந்தைகள் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்த பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் மூண்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு நீடித்த இந்த போரில், சுமார் 4 லட்சம் மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த போரின் போது வீசப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளால் அங்கு அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது […]

தெற்கு சூடானில், வியாழன் அன்று பீரங்கி குண்டு வெடித்து குழந்தைகள் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்த பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் மூண்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு நீடித்த இந்த போரில், சுமார் 4 லட்சம் மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த போரின் போது வீசப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளால் அங்கு அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், வெடிக்காத குண்டு ஒன்று வெடித்து சிதறியதில் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu