இந்தோனேசியா நாட்டில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் அங்குள்ள சட்டவிரோத தங்க சுரங்கம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் சிக்கி 11 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது மேலும் 19 ஊழியர்கள் புதையுண்டு உள்ளதாக கூறப்படுகிறது அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன
இந்தோனேசியாவின் பகுதியான சுலவேசி என்ற தனித் தீவில், கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது இருந்த போதும் கோரோண்டாலோ பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுரங்கத்துக்குள் இருந்த ஊழியர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதில் பூமிக்குள் புதைந்துள்ளனர். உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.