கினியா நாட்டின் தலைநகர் கொணகிரியில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பலியாகினர்.
கினியா நாட்டின் தலைநகரான கொணகிரியில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 பேர் பலியாகினர். சுமார் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். கொணகிரியில் அரசு அலுவலகங்கள் நிறைய உள்ளன. இங்கு எரிபொருள் சேமிப்பு நிலையத்தில் எரிபொருள் இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெயை கினியா இறக்குமதி செய்து வருகிறது. இந்த எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் வைத்து விநியோகிக்கப்படுகிறது. இந்த வெடி விபத்து காரணமாக எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செனிகல் மற்றும் மாலியாவில் இருந்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்க வர உள்ளனர் என்று கினியா பாதுகாப்பு துறை அமைச்சர் பஷீர் தியலு கூறியுள்ளார்.