வெளிநாட்டினருக்கு நடத்திய பரிசோதனைகளில் 11 உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்திய விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. டிசம்பர் 24-ந்தேதியில் இருந்து 3-ந்தேதி வரையில் 19, 227 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 124 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 40 மாதிரிகளுக்கான முடிவுகள் வந்துள்ளன. அவற்றில் 11 ஒமைக்ரான் துணை வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எக்ஸ்பிபி.1 வைரஸ் 14 பேருக்கும், பிஎப்.7.4.1. வைரஸ் ஒருவருக்கும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவை ஏற்கனவே இந்தியாவில் நுழைந்திருப்பவைதான் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.














