பாகிஸ்தான் - நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் பலி

June 5, 2024

பாகிஸ்தானில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்றில், விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவட்டா பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு சுரங்க தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 1500 அடி ஆழத்துக்கு சென்ற போது, விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது. இந்த வாயு வேகமாக சுரங்கத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளது. சுரங்கத்தில் […]

பாகிஸ்தானில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்றில், விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவட்டா பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இங்கு சுரங்க தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 1500 அடி ஆழத்துக்கு சென்ற போது, விஷவாயு கசிந்ததாக கூறப்படுகிறது. இந்த வாயு வேகமாக சுரங்கத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளது. சுரங்கத்தில் இருந்த பணியாளர்கள் மயங்கி விழுந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு சென்று மயங்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, குறிப்பிட்ட அந்த தனியார் சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விஷவாயு கசிவு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu