பூமியை நெருங்கும் 110 அடி விண்கல் - நாசா எச்சரிக்கை

December 1, 2022

இன்று பூமிக்கு நெருக்கமாக, 110 அடி அகலம் உடைய விண்கல் ஒன்று வருவதாக நாசா எச்சரித்துள்ளது. Asteroid 2022 WS9 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், ஒரு பெரிய வணிக விமானத்தின் அளவை ஒத்ததாகும். இது 1.7 மில்லியன் கிலோமீட்டர் தூரம் வரையில் பூமிக்கு நெருக்கமாக வரவுள்ளது. மேலும், மணிக்கு 65235 கிலோமீட்டர் வேகத்தில் இது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஏவுகணையின் வேகத்தை விட பல மடங்கு உயர்வாகும். இந்த விண்கல்லின் அளவு மற்றும் […]

இன்று பூமிக்கு நெருக்கமாக, 110 அடி அகலம் உடைய விண்கல் ஒன்று வருவதாக நாசா எச்சரித்துள்ளது.

Asteroid 2022 WS9 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், ஒரு பெரிய வணிக விமானத்தின் அளவை ஒத்ததாகும். இது 1.7 மில்லியன் கிலோமீட்டர் தூரம் வரையில் பூமிக்கு நெருக்கமாக வரவுள்ளது. மேலும், மணிக்கு 65235 கிலோமீட்டர் வேகத்தில் இது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஏவுகணையின் வேகத்தை விட பல மடங்கு உயர்வாகும். இந்த விண்கல்லின் அளவு மற்றும் வேகம் இரண்டுமே அச்சுறுத்தும் வகையில் உள்ளதால், இதனை அபாயகரமான விண்கல் என்று நாசா எச்சரித்துள்ளது. மேலும், நவீன ரேடார் தொழில்நுட்பம் மற்றும் தொலைநோக்கிகள் மூலம் இந்த விண்கல்லின் பாதை கண்காணிக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

Asteroid 2022 WS9 விண்கல், அப்போலோ குழுமத்தை சேர்ந்ததாகும். நவம்பர் 28ஆம் தேதி இது கண்டறியப்பட்டது. இந்த விண்கல் சூரியனை ஒரு முறை சுற்றிவர 1655 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அத்துடன், சூரியனிலிருந்து 693 மில்லியன் கிலோமீட்டர் தொலைவாகவும் 126 மில்லியன் கிலோமீட்டர் நெருக்கமாகவும் சுற்றுவட்ட பாதையில் செல்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu