இஸ்ரேலில் போர் நடைபெற்ற வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
இஸ்ரேல் மட்டும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதிலிருந்து இதுவரை நான்கு விமானங்களில் பல்வேறு இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பிலும் தங்கள் சொந்த செலவிலும் இதுவரை 110 தமிழர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளனர். மேலும் அங்கு சிக்கித் தவித்தால் 128 தமிழர்கள் பற்றிய தகவல்கள் அறியப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு கட்டங்களாக புதுடெல்லி வந்த தமிழர்கள் அவர்களது இல்லம் வரை தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்த செல்லப்பட்டிருக்கின்றனர். 49 தமிழர்களுக்கு விமான பயண சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, 32 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், ஒன்பது தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும், எட்டு தமிழர்கள் மதுரை விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர்.