11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 174 ரன்களை அடித்து இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இந்தியாவும் இலங்கையும் 2வது அரையிறுதியில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கையின் லக்வின் […]

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 174 ரன்களை அடித்து இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது

11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இந்தியாவும் இலங்கையும் 2வது அரையிறுதியில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கையின் லக்வின் அபேசிங்க 69 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில், சேத்தன் சர்மா 3 விக்கெட்டுகள், ஆயுஷ் மத்ரே மற்றும் கிரண் சோர்மலே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.174 ரன் எனும் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆட்டத்தின் இறுதியில், இந்தியா 21.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.இதன்மூலம், இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu