சத்தீஸ்கரில் உள்ள வண்டோலி கிராமத்தில் 12 நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் கமாண்டோ படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலத்தின் எல்லை அருகே உள்ள வண்டோலி கிராமத்தில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் போலீசார் மற்றும் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையின் காரணமாக 12 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். சுமார் 6 மணி நேரங்கள் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த 12 நக்சலைட்டுகள் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் போலீசார் அங்கு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு INSAS துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினார். மேலும் மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி, நக்சலைட்டுக்கு எதிரான இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமாண்டோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.