மறைந்திருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் ஹசன் கெல் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தில் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, மறைந்திருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த பகுதியில் மீதமுள்ள கிளர்ச்சியாளர்களை அழிக்க நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.