பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ரஞ்சிக்கோட்டை கிரிக்கெட்டில் இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடியது சாதனையாக இருந்தது. மேலும் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சித் கோப்பை அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது யுவராஜ் மற்றும் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து ரஞ்சிகோப்பை கிரிக்கெட்டில் இளம் வயது வீரர் என்ற சாதனையை பீஹார் மாநிலத்தை சேர்ந்த 12 வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.