ரூ.120 கோடியில் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

September 24, 2022

ஆந்திராவில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குப்பம் தொகுதி. இந்த தொகுதிக்கு முதல்வர் ஜெகன்மோகன் நேற்று வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெகன் பேசியதாவது: கடந்த ஆட்சியில் முதல்வரின் தொகுதியில் கூட ஒரு வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகள் வெறும் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும். மேலும் யாமிகானிபல்லி, மதனபல்லி பகுதிகளில் இந்த அரசு ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டும் […]

ஆந்திராவில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது குப்பம் தொகுதி.

இந்த தொகுதிக்கு முதல்வர் ஜெகன்மோகன் நேற்று வந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெகன் பேசியதாவது:

கடந்த ஆட்சியில் முதல்வரின் தொகுதியில் கூட ஒரு வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. ஹந்திரி-நீவா குடிநீர் கால்வாய் திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணிகள் வெறும் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும். மேலும் யாமிகானிபல்லி, மதனபல்லி பகுதிகளில் இந்த அரசு ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டும் பணியை மேற்கொள்ளும். மேலும் குப்பம் மக்களுக்காக ரூ.120 கோடி செலவில் பாலாற்றில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்கப் பணிகள் நடைபெறும். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.

பாலாற்றில் தடுப்பணைகளை மேலும் உயர்த்தினால் தமிழகப் பகுதிகளுக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபடும் ஆபத்து உள்ளது. ஜெகனின் இந்த அறிவிப்பு மூலம் பாலாறு பிரச்சினை மீண்டும் எழும் என்று தெரிகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu