1200 ஏக்கர் சம்பா பயிர் நாசம்: விவசாயிகள் வேதனை

November 1, 2022

1200 ஏக்கர் சம்பா பயிர் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னங்குடி கடற்கரை கிராமத்தை ஒட்டியுள்ள, குமாரக்குடி, சங்கேந்தி, ராதாநல்லூர், வடகட்டளை, காலமாநல்லூர் ஆகிய கிராமங்களில் 1200 ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், வடிகால் வழியாக கடலில் கலக்கும் கடல் நீர் சம்பா பயிர்களை சூழ்ந்துள்ளன. கடல்நீர் உட்புகுந்து சேதமான இளம்பயிர்களை கணக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர […]

1200 ஏக்கர் சம்பா பயிர் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்னங்குடி கடற்கரை கிராமத்தை ஒட்டியுள்ள, குமாரக்குடி, சங்கேந்தி, ராதாநல்லூர், வடகட்டளை, காலமாநல்லூர் ஆகிய கிராமங்களில் 1200 ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், வடிகால் வழியாக கடலில் கலக்கும் கடல் நீர் சம்பா பயிர்களை சூழ்ந்துள்ளன.

கடல்நீர் உட்புகுந்து சேதமான இளம்பயிர்களை கணக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். அதேபோல் சேவனாற்றில் கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu