மெக்சிகோவில் 122 டிகிரி வெயில் -  100 பேர் பலி

June 30, 2023

மெக்சிகோவில் வெப்ப அலை தாக்கி 100 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரியை எட்டியது. கடந்த 3 வாரங்களாக வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் […]

மெக்சிகோவில் வெப்ப அலை தாக்கி 100 பேர் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரியை எட்டியது. கடந்த 3 வாரங்களாக வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பகுதிகள் தான் இந்த கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu