உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸில் ஆன்மீக சொற்பொழிவின் போது 122 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்றவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பின்னர் திரும்பி செல்லும் வழியில் வெளியே செல்ல இடம் இன்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார் .மேலும் இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்