ஆந்திராவில் 125 உயர அம்பேத்கர் சிலை ஜனவரி 19ஆம் தேதி திறப்பு

January 5, 2024

ஆந்திர மாநிலத்தில் 125 அடி உயரம் உள்ள அம்பேத்கர் சிலை ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுராஜ் மைதானத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டு, சிலைக்கு முன் மற்றும் பின்புறங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் தியேட்டர், அருங்காட்சியகம், உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகளுக்காக ரூபாய் 268 கோடி செலவில் முதல் கட்ட […]

ஆந்திர மாநிலத்தில் 125 அடி உயரம் உள்ள அம்பேத்கர் சிலை ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுராஜ் மைதானத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டு, சிலைக்கு முன் மற்றும் பின்புறங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் தியேட்டர், அருங்காட்சியகம், உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகளுக்காக ரூபாய் 268 கோடி செலவில் முதல் கட்ட பணிகள் நடைபெற்றன. இதன் இரண்டாவது கட்டமாக ரூபாய் 106 கோடியில் சிலைக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெறும்நிலையில் உள்ளது. மேலும் இந்த சிலை வருகிற 19ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில சமூக நலத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu