மோசடி நிறுவனங்களில் சிக்கிய 13 இந்தியர்கள் உள்ளிட்ட 61 பேரை மியான்மர் அரசு மீட்டது.
மியான்மர், கம்போடியா போன்ற நாடுகளில் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்பு என்ற காரணத்தை காட்டி, மோசடி கும்பல்கள் வெளிநாட்டவரை ஏமாற்றுகின்றன. பலர் அதை நம்பி சென்று மோசடியில் சிக்கிக் கொள்கிறனர். இந்த மோசடி நிறுவனங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் சிக்கி தவிக்கின்றனர். இதனைத் தீர்க்க, மியான்மர் அரசுடன் இணைந்து இந்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மோசடி நிறுவனங்களில் சிக்கிய 13 இந்தியர்கள், 39 சீனர்கள் உள்ளிட்ட 61 பேரை மியான்மர் அரசு மீட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கள் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.