தமிழக அரசு 13 புதிய நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு 13 புதிய நகராட்சிகளை உருவாக்குவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன. மேலும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதற்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 16 மாநகராட்சிகளுக்கு கூடுதலாக 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகள் இணைக்கப்படும். புதிதாக 25 பேரூராட்சிகள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.முதல்வர் மு.க. ஸ்டாலின், கன்னியாகுமரி நகராட்சியாக உயர்த்தப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.