திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் 13 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ரயில்வே யார்ட்டில் மழைநீர் தேங்கி உள்ளதால் முன்பதிவு இல்லாத 13 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் திருநெல்வேலி - செங்கோட்டை, திருநெல்வேலி- நாகர்கோவில், செங்கோட்டை - திருநெல்வேலி, மணியாச்சி- திருச்செந்தூர், திருச்செந்தூர்- மணியாச்சி, திருநெல்வேலி- ஸ்ரீ வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- பாலக்காடு, கன்னியாகுமரி - புதுச்சேரி உள்ளிட்ட
பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.