கோவை.கோ நிறுவனம், 140 ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்கியது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான கோவை.கோ, அதன் ஊழியர்களின் விசுவாசத்திற்கு மரியாதை செலுத்தும் பொருட்டு 140 பேருக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்கியுள்ளது. மென்பொருள் சேவைகள் வழங்கும் இந்த நிறுவனம், ஊழியர்களின் செயல்திறனையும், அவர்களின் விசுவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு போனஸ் வழங்கியுள்ளது. 2022-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பணியாற்றியவர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டது. ஊழியர்கள் வீடு வாங்குவதற்கும் முதலீடுகள் செய்யவும் உதவியதாக நிறுவனர் சரவணகுமார் கூறியுள்ளார். கோவை.கோ நிறுவனம் வருடத்திற்கு 15 மில்லியன் டாலர் விற்பனை செய்கிறது.