கம்போடியாவில் இணைய குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கம்போடியாவில் இணையம் வாயிலாக குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியர்கள் மீட்கப்பட்டு விரைவில் இந்தியா திரும்ப உள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கம்போடியா தலைநகர் புணா பெண்ணில் இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், கம்போடியாவில் இணைய குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 14 இந்தியர்கள் அந்நாட்டு காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போல் வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி இணைய குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 650 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கம்போடியாவில் போலி வாக்குறுதிகளால் கவரப்பட்டு இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்களின் கையில் சிக்கி இது போன்ற இணைய வழி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய மோசடிகளுக்கு எதிரான விழிப்புணர்வை கடந்த ஏப்ரல் மாதம் இந்திய தூதரகம் வெளியிட்டது.