குஜராத்தில் 600 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் போதை பொருள் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தனர். அதில் சுமார் 90 கிலோ போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்த போதைப் பொருள்களின் மதிப்பு 600 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதுவரை குஜராத்தில் கடலோர போலீசாரால் ரூபாய் 3400 க்கும் மேற்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.